இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம்; 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்- நயினார் நாகேந்திரன்
1 min read
Now we have taken Muruga in our hands; we will take Tamil Nadu in our hands in 2026 – Nayinar Nagendran
17.6.2025
சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
- விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
- திருப்பரங்குன்றத்தில் எப்போது பதற்றமான சூழல் ஏற்பட்டதில்லை.
- முருகன் மாநாடு அரசியல் மாநாடு அல்ல. பக்தர்களுக்கான மாநாடு.
- முருகனுக்கு தமிழகத்தில் தான் விழா எடுக்க முடியும்.
- உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருவதாக உள்ளது. ஆந்திர துணை முதலமைச்சர் பவண் கல்யாண் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
- மேடையில் தலைவர்கள் மட்டும் இருப்பார்கள். அரசியல் கருத்துக்கள் இருக்காது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு. முருகர் பக்தர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் கலந்து கொள்ளலாம்.
- நாங்கள் இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம். 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.