June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி:மாற்றுத்திறனாளியை கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

1 min read

years in prison for murdering disabled person

24.6.2025
சாம்பவர் வடகரையில் மாற்றுத்திறனாளியை இரும்புக் குழாயால் அடித்துக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 25,000ம் அபராதமும் விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை தேவர் சாவடி தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 38 ). மாற்றுத் திறனாளியான இவருக்கும் அதே பகு தியைச் சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த10.03.2018 அன்று இரவு வீட்டு அருகே நின்று கொண்டிருந்த பழனியப்பனை முத்துராமன் இரும்பு குழாயால் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பழனியப்பன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு
சிகிச்சை பலனின்றி 16.03. 2018 அன்று இறந்துவிட்டார்.

இது தொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி எஸ்.மனோஜ் குமார் வழக்கை விசாரணை செய்து முத்துராமனுக்கு (37) பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 25,000/- அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி ஆஜரானார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.