June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 min read

Awareness program for train passengers in Tenkasi

26.6.2025
தென்காசி ரயில் நிலையம் காத்திருப்போர் அறையில் ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உத்தரவுபடி தென்காசி இருப்பு பாதை காவல் நிலையம் சார்பாக தென்காசி ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் வைத்து பெண்கள், பெண் குழந்தைகள், ஆகியோர் களுக்கான உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தென்காசி இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கற்பகவிநாயகம் தலைமை தாங்கினார்.

தென்காசி உதவி ஆய்வாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். தென்காசி பெண் தலைமை காவலர் ராணி, காவலர் உதய சங்கர் மற்றும் காவலர்கள் ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

அப்போது ரயிலில் பயணம் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய குற்ற சம்பவங்களில் இருந்து எப்படி பாதுகாப்பாக செல்வது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்வது, மற்றும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யாரை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், அது சம்பந்தமான செயலியை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பன என்பன போன்ற விழிப்புணர்வு தகவல்களை எடுத்துக் கூறியதோடு அதனை செய்முறை மூலம் செய்து காட்டினார்கள்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில் பயணிகள் தெரிவித்தனர் முடிவில் தென்காசி இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரியப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.