ஆவுடையானூர் பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர் சேர்க்கை தேர்வு
1 min read
National Cadet Corps Student Admission Exam in Avudaiyanur School
26.6.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர் சேர்க்கை தேர்வு நடைபெற்றது.
ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய மாணவர் படையில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் 2025-26 கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கைக்கான தேர்வு பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதனை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு திருநெல்வேலி மண்டலத்தின் முதன்மை கமெண்டிங் ஆபிசர் லெப்டினட் கர்னல் கார்த்திகேஷ் மற்றும் சுபைதார் மேஜர் சந்தோஷ் ஜான் பள்ளிக்கு வருகை தந்தனர். என்சிசி உயர் அலுவலர்களை பள்ளியின் நிர்வாகி அருட்திரு அந்தோணிஅ. குரூஸ் வரவேற்று, பள்ளியின் என்சிசி செயல்பாடுகள் மற்றும் மண்டல அலுவலகத்தின் ஒத்துழைப்பு குறித்து நன்றி தெரிவித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப், பள்ளியின் என்சிசி அலுவலர் மிக்கேல் அந்தோணி மற்றும் உதவி அலுவலர் அந்தோணி சவரிமுத்து உடனிருந்தனர்.
ஆய்வு அலுவலர்கள் பள்ளியில் மாணவர்களின் செயல்பாடுகளை பார்வையிட்டு வெகுவாக பாராட்டி என் சி சி யின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்கள்.
உயர் அலுவலர்கள் பள்ளிக்கு வருகை தந்தது தேசிய மாணவர் படையின் அனைத்து மாணவர்களுக்கும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நிகழ்வினை நிர்வாகி தந்தையின் ஆலோசனைப்படி, தலைமை ஆசிரியர் தலைமையில் என்சிசி அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.