June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் பிரபல பிரியாணி கடை உரிமம் ரத்து

1 min read

Pavurchatram, a famous biryani shop, has its license revoked

26.6.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில்
பக்கெட் பிரியாணி சாப்பிட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பிரியாணி கடையின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி பாவூர்சத்திரத்தில் பிரபல பிரியாணி கடையில் பக்கெட் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட 2 குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி ஊராட்சி குரு சாமிபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 21 ஆம் தேதி பாவூர்சத்திரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் 5 பேர் சாப்பி டக் கூடிய பக்கெட் சிக் கன் பிரியாணி ஆர்டர் செய்து அதை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் முரு கன், அவரது மனைவி மற்றும் மகன், மகள் ஆகி யோர் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட ஒரு சில மணி நேரத்திலேயே 5 பேருக்கு கடுமையான வாந்தி, பேதி
ஏற்பட்டதால் மயக்கம் அடைந்தனர். உடன டியாக பாவூர்சத்திரம் செல்வ விநாயகரபுரத்தில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனைவரும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பினர்.

இதே போன்று அதே கடையில் 21ம் தேதி கடையம் அருகேயுள்ள கட்ளையூரை சேர்ந்த மாடசாமி என்பவரின் குடும்பத்தினர் 9 பேர் பக்கெட் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். அவர் கள் சாப்பிட்ட உணவு கெட்டுப்போனதால்தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ், கீழப்பாவூர் வட்டார உணவு பாது காப்பு அலுவலர் முகமது அப்துல் ஹக்கீம் ஆகி யோர் பாவூர்சத்திரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண் டனர். அப்போது கடை யில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பணி யாளர்கள் மருத்துவ பரி சோதனைக்குட்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் நோட்டீஸ் கொடுத்து அந்த கடைக்கான உரிமத்தை ரத்து செய்தனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பிரியாணி கடைகளில் இன்றைய தினம் விற்காத உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் அந்த உணவை விற்கிறார்கள் என்று தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற் கொள்ள வேண்டும். கெட்டுப்போன பொருட்களையோ, கெட்டுப்போன இறைச்சிகளையோ பயன்படுத்துவது தெரிய வந்தால் அந்த கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையி னர் பிரியாணி கடைகள் மட்டுமின்றி அனைத்து சைவ, அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.