நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு; 4 பேர் தூக்கில் போடப்பட்டனர்
1 min read
Nirbhaya rape case; 4 people were hanged
20/3/2020
நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை திகார் சிறையில் தூக்கில் போடப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி டெல்லியில் நடந்த கொடூரத்தை இப்போது நினைத்தாலும் பதைபதைக்கிறது. அன்றைய தினம் ஓடும் பஸ்சில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பலரால் பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை செய்யப்பட்டார். அதன்பின் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
படுகாயத்துடன் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாக முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அட்சய் குமார் சிங் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தது. இதில் அவர்கள் 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டான்.
இதையடுத்து, மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு, கருணை மனு என குற்றவாளிகள் தங்களுக்கான சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினர். எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை. அவர்களை தூக்கில் போடும் தேதி மட்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக மார்ச் 20-ந் தேதி அதிகாலை 5.30 மணி என நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஊழியர்கள் டெல்லி திகார் சிறைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தூக்கில் போடுவது தொடர்பாக ஒத்திகையை கடந்த புதன்கிழமை காலை நடத்தினார்.
இந்த நிலையில், மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தூக்கில் போடப்பட்டனர்
குறிப்பிட்ட நாளான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு 4 பேரும் தூக்கில் போடப்பட்டனர்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு…
டெல்லி துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்பட்டனர்.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவரை சாலையில் தூக்கி வீசினர். அந்த மாணவி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் விசாரணையின்போது டெல்லி திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டான். அவனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவர் பெயர் குறிப்பிடாத இடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டான்.
மற்ற 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது. பின்னர் 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அந்த 4 பேரின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தங்களுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தியும், அவர்களால் தூக்குத் தேதியை தள்ளிப்போட மட்டுமே முடிந்தது. தூக்குப் போடுவதற்கான தேதி மூன்று முறை நிர்ணயிக்கப்பட்டு, தள்ளிப்போனது. பின்னர் இறுதியாக இன்று தூக்கிலிடப்பட்டனர்.
வழக்கு நடந்த விவரம்
12-. 12.2012
டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி(நிர்பயா)வும், அவரது நண்பரும் சினிமா பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்னர். அப்போது 6 பேர் கொண்ட கும்பலால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்தனர். தாங்கொண்ணா துயரத்தில் இருந்த அந்த மாணவி கதறி துடித்தார். அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று கதறி அழுதார். ஆனாலும் அவர்கள் தங்கள் இச்சையை நிறைவேற்றி அந்தப் பெண்ணை சித்ரவதை செய்தனர்.
பின்னர், அந்த மாணவியும் அவருடன் வந்த நண்பரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அதன்பிறகு, அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
17.12. 2012:
பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ், வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகியோரை டெல்லி போலீசார் அடையாளம் கண்டனர்.
21.12 2012:
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனைக் கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். முக்கியக் குற்றவாளியான முகேசை பெண்ணின் நண்பர் அடையாளம் கண்டார்.
22.12. 2012:
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 6-வது நபரான அட்சய் தாக்குர் பிகாரில் பிடிபட்டார்.
26.12. 2012:
கடந்த 11 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த நிர்பயா, சிங்கப்பூர் ஆஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
29.12. 2012:
சிங்கப்பூரில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிர்பயா இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு இறந்தார்.
2.2. 2013:
பாலியல் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீதும் விரைவு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
11.3. 2013:
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
31.8. 2013:
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனை 3 ஆண்டுகள் சிறார் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டது.
10.9. 2013:
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அட்சய் சிங் தாக்குர், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் முகேஷ் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது.
13.9. 2013:
நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேருக்கும் டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மார்ச் 13, 2014:
நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.
மார்ச் 15, 2014:
முகேஷ் மற்றும் பவன் குப்தாவின் மரண தண்டனையை நிறைவேற்ற மார்ச் 31, 2014 வரை இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
20.12, 2015:
இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவர் பெயர் குறிப்பிடாத இடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டார்.
21.12. 2015:
இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி மகளிர் ஆணையம் தொடர்ந்த வழக்கை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
5.5. 2017:
நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. மரண தண்டனையை உறுதி செய்த டெல்லி ஐகேர்ட்டின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
15.12. 2017:
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருள் வினய் சர்மா மற்றும் பவண் குமார் குப்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். முன்னதாக, முகேஷ் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோாட்டு டிசம்பர் 12-ந் தேதி நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
9.7. 2018:
மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று பேரின் சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13.12. 2018:
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரது மரண தண்டனையையும் உடனடியாக நிறைவேற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
14.2 2019:
4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை நடைமுறையை துரிதப்படுத்துமாறு நிர்பயாவின் பெற்றோர்கள் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
30.10. 2019:
கருணை மனுவைத் தவிர அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதாக திகார் சிறை அலுவலர்களால் குற்றவாளிகள் நால்வரிடமும் தெரிவிக்கப்பட்டது.
8.11. 2019:
குற்றவாளிகளுள் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன் கருணை மனுவைத் தாக்கல் செய்தார்.
1.12. 2019:
வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்கக் கோரி டெல்லி அரசு பரிந்துரைத்தது.
6.12. 2019:
வினய் சர்மா கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியது.
10.12. 2019:
மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக அக்ஷ்ய் சிங் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
18.12. 2019:
மரண தண்டனைக்கு எதிராக அக்ஷ்ய் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
7.1. 2020:
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் ஜனவரி 22-ஆம் தேதி தூக்கிலிட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.
17.1. 2020:
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்து உத்தரவிட்டது.
17.2. 2020:
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் மூன்றாவது முறையாக தேதி நிர்ணயித்தது.
4.3. 2020:
வினய் குமார், அக்ஷ்ய் தாக்குர் மற்றும் முகேஷ் சிங் ஆகியோரது கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடைசியாகத் தாக்கல் செய்யப்பட்ட பவன் குப்தாவின் கருணை மனுவையும் நிராகரித்தார்.
5.3. 2020:
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் மீண்டும் புதிய தேதியை நிர்ணயித்தது.
18.3. 2020:
நால்வரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை, தூக்கிலிடும் ஊழியரான பவன் ஜல்லத் மேற்கொண்டார்.
19.3. 2020:
நிர்பயா வழக்கு குற்றச் சம்பவம் நடைபெறும்போது தான் டெல்லியிலேயே இல்லை என்று முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
20.3. 2020:
முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நால்வரும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
