June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

15-ந் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்களுக்கு அனுமதி: மத்திய அரசு முடிவு

1 min read
Seithi Saral featured Image


Permission for international flights after 15th

3/4/2020

ஊரடங்கு முடிந்த பின்னர் வருகிற 15-ந் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச விமானங்கள்

நமது நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை உள்ளது.
15-ந் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படும்.

இருப்பினும், எந்தெந்த நாடுகளிலிருந்து விமானம் வரும் என்பது, சூழலுக்கு ஏற்றபடி அனுமதி வழங்கப்படும்.

வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள், ஊரடங்கு காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்பதிவுக்கு அனுமதி:

இந்நிலையில் விமான போக்குவரத்து துறை செயலர் பிரதீப் சிங் கரோலா கூறுகையில்,

‘ஊரடங்கு முடிந்த பிறகு மேற்கொள்ளும் விமான பயணங்களுக்கான முன்பதிவுகளை விமான சேவை நிறுவனங்கள் ஏற்கலாம்.

ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், முன்பதிவு ரத்து செய்ய வேண்டியது வரும்’ என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.