June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மக்களை பாதிக்காத வகையில் ரெயில் கட்டணம் உயரும் – மத்திய மந்திரி சோமண்ணா பேட்டி

1 min read

Rail fares will increase in a way that does not affect the people – Union Minister Somanna

27.6.2025
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைய இருப்பதையொட்டி, அங்கு புதிய ரெயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா காஞ்சிபுரத்தில் புதிய ரெயில் நிலையத்தை இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அங்கு புதிய ரெயில் நிலையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருந்து வருகிறது. கொரோனா நோய் பரவலுக்கு பிறகு அனைத்து கட்டணங்களும் உயர்ந்துவிட்டன. ஆனால், ரெயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்படவே இல்லை. மக்களை பாதிக்காத வகையில் ரெயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *