இந்தியாவில் இளைஞர்களையும் விட்டுவைக்காத கொரோனா; 42 சதவீதம் பேர் பாதிப்பு
1 min read
Corona not leaving young people in India; 42 percent are affected
5/4/2020
இந்தியாவில் இளைஞர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் இளைஞர்கள்தான்.
கொரோனா
கொரோனா இத்தாலியை தாக்கியபோது அங்குள்ளவர்களின் உணவு பழக்கவழக்கம்தான் என்றும் அது இந்தியாவை ஒன்றும் செய்யாது என்று பலர் வலைதளங்களில் தகவல் வெளியிட்டனர். இத்தாலி போன்ற நாடுகளில் பரவும்போது இந்தியா வெப்ப மண்டல நாடு என்றும் அது இந்தியாவை அண்டாது என்றும் பலர் கூறினார்கள்.
ஆனால் இந்தியாவுக்குள் அது காலெடுத்து வைத்தபோதுகூட இங்கு யாரும் கொரோனாவுக்கு பலியாக மாட்டார்கள் என்று பலர் மார்தட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால் அரசு எச்சரித்தபோதும் பலர் தெனாவெட்டாக சாலையில் திரிந்தனர்.
தற்போது இங்கும் உயிர்பாலியாக வருகிறது. அந்த நிலையில் கூட இளைஞர்களை ஒன்றும செய்யாது என்று சிலர் நம்பினார்கள்.
ஆனால் இந்த நம்பிக்கையும் பொய்யாகிவட்டது. தற்போது இளைஞர்களையும் அதிக அளவில் இந்த நோய் தாக்கி உள்ளது.
42 சதவீதம் பேர்
இந்தியாவில் 21 வயது முதல் 40 வயது இடைப்பட்டவர்களே 42 சதவீதம் கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவில் 21 வயது முதல் 40 வயது இடைப்பட்டவர்களே 42 சதவீதம் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த வயது விவரக்குறிப்பு பகுப்பாய்வை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், வெளியிட்டார் அதன் விவரம் வருமாறு:-
42 சதவீத கொரோனா பாதிப்புகள் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. நடுத்தர வயதுடையவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
20 வயதுக்கு உட்பட்டவர்கள் 9 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 21 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் 42 சதவீதமும், 41 முதல் 60 வயது வரையில் 33 சதவீதம் பேரும் 61 வயதுக்கு மேல் 17 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் 2,902 கொரோனா பாதிப்புகளில் 58 நோயாளிகள் ஆபத்தானவர்கள். இவற்றில் பெரும்பாலானவை மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் கேரளாவில் உள்ளன.
“வயதானவர்கள் மற்றும் கொமொர்பிட் நிலைமை உள்ளவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இருதய மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆபத்து அதிகம் உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
2 மடங்கு குறைவு
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின்விளைவு இரு மடங்கு மிகக் குறைவு. இருப்பினும், தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதிலும், அன்றாட யுத்தத்தை நடத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு தவறும் நம்மை எதிர்த்துப் போரில் பின்னுக்குத் தள்ளும் திறன் கொண்டது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.