ஊரடங்கு நேரத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்; 9 பேர் சுட்டுக் கொலை
1 min read
Terrorists trying to infiltrate India during the curfew; 9 people were shot dead
5/4/2020
இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை பயன்படுத்தி காஷ்மீருக்குள் பயங்கரவாதிள் ஊடுருவ முயற்சி செய்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பங்காரவாதிகள்
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம் அதிகரித்து வந்தது. அந்த மாநிலம் அவர்களின் தீவிரவாதத்திற்கு களமாக விளங்கியதால் அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறைந்தது- மேலும் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
9 பேர் சுட்டுக் கொலை
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கெரான் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் இன்று(ஞாயிற்றுக் கிழமை) சுட்டுக்கொண்டனர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
தெற்கு காஷ்மீரின் பத்பூராவில் பயங்கரவாதிகள் 4 பேரை நேற்று இந்திய ராணுவம் சுட்டுக்கொன்ற நிலையில், கெரான் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மேலும் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.