June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

167 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கிய இந்திய ரயில்வேத்துறை

1 min read
For the first time in 167 years, the Indian Railways has stalled

167 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கிய இந்திய ரயில்வேத்துறை

ஊரடங்கால் ஆசியாவிலேயே மிகப்பழமையானதும், உலகின் 4வது மிகப்பெரியதுமான இந்தியன் ரயில்வே 167 ஆண்டுகளில் முதல்முறையாக முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால் 67 ஆயிரத்து 368 கிலோ மீட்டர் நீள இருப்புபாதைகள் பயன்பாடில்லாமல் உள்ளன. மேலும் நாளொன்றுக்கு 7,349 ரயில் நிலையங்களை இணைக்கும் 20 ஆயிரம் பயணிகள், நீண்டதூர மற்றும் புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.அதே சமயம் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 20 ஆயிரம் பழைய ரயில்பெட்டிகள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்துவதற்கான வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தியன் ரயில்வேக்கு சொந்தமாக 125 மருத்துவமனைகள் இயங்கி வரும் போதிலும், கொரோனா பரவல் அதிகரிக்கும் போது நிலைமையை சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை 5000 வார்டுகள் தயார்நிலையில் உள்ளன.

கூடுதலாக தேவைப்பட்டால் 48 மணி நேரத்திற்குள் தயார்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.