ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் ஏழைகள்; வீடு தேடி செல்லுமா உதவி
1 min read
The poor affected by the curfew; Help home search
7/4/2020
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு வீடு தேடி செல்லுமா உதவிகள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஊரடங்கு
கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் பரவி உள்ளது. அதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் அதை கட்டுப்படுத்த தனித்திருப்பதுதான் நல்லது என அறியப்பட்டு உள்ளது. அதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் ஒருவர் உடலுக்குள் ஊடுருவி விட்டால் 28 நாட்கள் வரை அது உயிர்பெற்று இருக்கும். அந்த 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் அது தன் அறிகுறியை காட்டலாம். எனவே தான் கொரோனா பாதிக்கப்பட்டோருடன் தொடர்புடைய அனைவரையும் 28 நாட்கள் தனிமைப்படுத்துகிறார்கள்.
கொரோனா தொற்று யாருக்கு இருக்கிறது என்பதை அறிய முடியாத நிலையில் உள்ளவர்களுடன் யாரேனும் தன்னையும் அறியாமல் சேர்ந்து இருந்தால் அவர்களையும் தாக்கும். எனவே தான் பொதுமக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்து வருகிறது.
அலட்சியம்
ஆனால் சிலர் ஊரடங்கை அலட்சியம் செய்கிறார்கள். காய்கறி கடைகள் குறிப்பிட்ட நேரம் திறந்திக்கும் போது அங்கே மக்கள் குவிகிறார்கள். ஒவ்வொருவராக சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இல்லை.
இதைவிட ஞாயிற்றுக்கிழமை என்றால் இறைச்சி வாங்க கூட்டம் அலைமோதுவது வேடிக்கையாக இருக்கிறது. இறைச்சியை ஞாயிற்றுக்கிழமைதான் சாப்பிட வேண்டுமா என்ன? அப்படி ஏன் கூட்டம் அலைமோத வேண்டும்?
இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடம் உள்ளது. ஏற்கெனவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு, ஊரடங்கை நீட்டிப்பதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்து உள்ளது. ஒருவேளை கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கை நீட்டிப்பதுதான் நல்லது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பாதிக்கப்படுவது யார்?
இந்த ஊரடங்கால் அனைவருக்கும் பாதிப்பு என்று சொல்லலாம். வீட்டில் முடங்கி கிடப்பது எல்லாம் பாதிப்பு என்று சொல்ல முடியாது. அரசு வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் வந்துவிடும். தனியார் நிறுவனங்ளில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைக்கு வராவிட்டாலும் கண்டிப்பாக சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அவர்களுக்கும் சம்பளம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் பல சிறிய நிறுவனங்கள், கம்பெனிகளில் சம்பளம் கிடைக்குமா என்பது சந்தேகமே. காரணம் அந்த நிறுவனம் இந்த ஊரடங்கால் போதிய வருமானம் இன்றி இருக்கும். அப்படி ஒரு சூழ்நிலையில் அவர்களால் சம்பளம் கொடுக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
இது ஒருபுறம் இருக்க, அன்றாட கூலித் தொழிலாளர்கள் நிலைதான் பரிதாபத்துக்குரியது. சில அத்தியாவசிய பணிகள் நடக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. அதன்படி விவசாயம், அரிசி ஆலை போன்ற காய்கறி மார்க்கெட் ஆகியவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வேலை செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் தற்போது கோடை காலம் என்பால் விவசாய பணிகள் போதிய அளவு இருக்காது.
மெக்கானிக் மற்றும் கட்டிட தொழிலாளிகள், தீப்பெட்டி தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், அச்சக தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு நதி உதவி அளிப்பதாக கூறியுள்ளது. ஆனால் இன்னும் பல தொழிலாளர்கள் அதில் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களுக்கு உதவித் தொகை கிடைக்காது.
இப்படி கஷ்டப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு எந்த வகையிலாவது நிதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 1000 ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்தப் பணத்தை வீடுவீடாக சென்று கொடுத்தது வரவேற்கத்தக்கது. ஆனால் இதிலும் ஆளும் கட்சியினர் தலையீடு இருந்தது. இன்னும் பல இடங்களில் நிதி உதவி பணம் வழங்கப்படவில்லை. அந்தப் பணம் குடும்பம் நடத்த போதாது. எனவே அரிசி உள்ளிட்ட ரேஷன்பொருட்களையும் வீடுவீடாக கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அல்லது ஒவ்வொரு குடும்ப தலைவரின் வங்கி கணக்கை கொண்டு அதில் போதிய அளவு பணத்தை அரசே செலுத்த வேண்டும். அப்படினால்தான் அவர்கள் வறுமையின்றி வாழ வேண்டும். அதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யும்போது வசதி படத்தவர்களா இல்லையா என ஆராயாமல் அனைவரக்கும் உதவி செய்யவேண்டும். அப்படி செய்தால் ஊரடங்கை நீட்டித்தாலும் பிரச்னை வராது. இல்லாவிட்டால் காெள்ளை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்பதை யாவரும் மறந்து விடக்கூடாது.