இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவுக்கு உலகமே பாராட்டு
1 min read
இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே பாராட்டு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 38 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், 263 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ‘இலங்கையில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பின் படி, 2,000 கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அதனால், வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீடிக்கப்படுகிறது.
ஊரடங்கைப் பின்பற்றி, அனைத்து மக்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும்’ என, இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வெறும் 2,000 பேருக்கு மட்டுமே சிகிச்சையளிப்பதற்கான கட்டமைப்பு உள்ளதாக அரசு அறிவித்திருப்பது, இலங்கை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா இலவசமாக 10 டன் அளவுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளது. இந்தியாவின் இத்தகைய மனிதாபிமான செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் பாராட்டு தெரிவித்துள்ளன.