கட்டணமில்லாமல் கொரோனா பரிசோதனை -சுப்ரீம் கோர்ட் உத்தரவு
1 min read
கட்டணமில்லாமல் கொரோனா பரிசோதனை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் கொரோனா பரிசோதனையை அரசு மற்றும் தனியார் பரிசோதனை மையங்கள் கட்டணமில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு , அரசு மட்டும் தனியார் பரிசோதனை மையங்களில், கொரோனாவுக்கு கட்டணமில்லாமல் இலவசமாக பரிசோதனை நடத்த வேண்டும்.
அதற்கான கட்டணத்தை அரசே வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.