மனோரமா மகன் மருத்துவமனையில் அனுமதி
1 min read
8.4.2020
ஆச்சி என்று தமிழ் சினிமாவில் அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா. இன்றளவும் அவரின் புகழ் நிலைத்திருப்பதற்கு காரணம் அவரது நடிப்பு. நகைச்சுவை, குணச்சித்திரம் கதாபாத்திரத்தில் மனோரமா பிரபலமடைந்தார்.
இதுபோன்று பெண்கள் கதாபாத்திரத்தில் இன்றளவும் தமிழ் சினிமாவில் யாருமே இடம் பிடிக்கவில்லை. ஆனால் அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற மனோரமாவிற்கு எப்பொழுதுமே போதையில் இருக்கும் மகன் கிடைத்தது பெரும் கவலைதான்.
மனோரமாவின் மகன் போதைக்கு மிகவும் அடிமையானவர். லாக் டவுன் சமயத்தில் குடித்து போதை ஏற்றுவதற்கு எதுவுமே இல்லாத சூழ்நிலையில் மாத்திரைகளை உட்கொண்டு உள்ளார்.
அதிக அளவில் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டதால் இது தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது. இதனால் உடல்நல குறைவால் 7ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு பிரபல நடிகையின் மகனுக்கே இந்த நிலைமை என்றால், நாட்டின் குடிமகன் எந்த நிலைமையில் இருப்பார்கள் என்பதை நினைத்து பார்கவே முடியவில்லை.
போதைக்கு அடிமையான குடிமக்கள் சமுதாயத்தில் நிறையவே உள்ளனர். ஒயின் ஷாப் மூடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் நிறைய பேர் மன அழுத்தத்தில் உள்ளனர். சிலர் கிடைப்பதை குடித்து உயிரை விடுகின்றனர்.
இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும். அரசாங்க தரப்பில் குடி போதைக்கு அடிமையானவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. நூற்றுக்கணக்கான பிரச்சனைகளை சந்தித்து வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது.