தடபுடலாக உருவாகும் சந்திரமுகி 2 -ரஜினி கிடையாதாம்
1 min read
ரஜினிகாந்த் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக உலகமெங்கும் பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. கிட்டதட்ட தமிழ் சினிமாவில் 700 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் என்று கூட சொல்லலாம்.
ரஜினிக்கு நிகராக அந்த படத்தில் அமைந்திருந்தது ஜோதிகாவின் சந்திரமுகி கதாபாத்திரம் தான். ஜோதிகாவின் பார்வை ஒன்று போதும், மிகப் பெரிய நடிகை என்பதற்கு சான்று. வைகைப்புயலின் காமெடியை சொல்ல வேண்டுமா. பின்னி பெடல் எடுத்து இருப்பார் நம்ம வடிவேலு.
பி வாசு இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் வாசு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் ஆர்வமாக இருக்கிறார். அதில் ரஜினி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் வாசு இயக்கிய சிவலிங்கா படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராகவா லாரன்ஸ். பேய் படங்களில் ஹிட் கொடுத்து முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தின் கதைக்கு சரியாக இருப்பார் என முடிவெடுத்து விட்டார் போல.
மேலும் சந்திரமுகி 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. இதில் ராகவா லாரன்ஸுக்கு 3 கோடி வரை அட்வான்ஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் சரித்திரமாக அமைந்த படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்காமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது. சமீபகாலமாக இரண்டாம் பாகமாக உருவாகும் எந்த படங்களும் வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முந்தைய படத்தின் வெற்றியையும் சேர்த்தும் ஒழித்துக் கட்டி விடுகிறது.
ரஜினியின் முத்திரையாக சந்திரமுகி இருக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாகும். சில படங்களை அதன் போக்கிலேயே விட்டு விடுவது நல்லது. ராகவா லாரன்ஸ் மற்றும் வாசு இருவரும் தமிழ் சினிமாவில் சந்திரமுகி படைத்த சாதனைகளை சற்று யோசித்து பலமான திரைக்கதை அமைக்க வேண்டியது கட்டாயமாகும்.