நாகப்பட்டினம் டாக்டருக்கு கொரோனா; ஆஸ்பத்திரி மூடப்பட்டது
1 min read
Corona to doctor in Nagapattinam; His hospital was closed
10/4/2020
நாகப்பட்டினம் டாக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலிருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய சுமார் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அண்மையில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். இதில், 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது கடந்த 3-ந் தேதியும், 6 பேருக்கு கொரோனா இருந்தது 5-ந் தேதியும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
டாக்டர்
இந்த நிலையில், நாகப்பட்டினம் காடம்பாடியைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது ஆஸ்பத்திரி மூடப்பட்டது.
தனது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்த அந்த மருத்துவர், தாமாக முன்வந்து தன்னை பரிசோதனைக்கு உள்படுத்திக் கொண்டதாகவும், தொடக்க நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பெரிய அளவிலான எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.