கொரோனாவுக்கு தூத்துக்குடியில் பெண் சாவு; தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா
1 min read
Woman died becouse of corona; 77 more coroners in Tamil Nadu
10/4/2020
தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி பெண் கொரோனாவுக்கு பலியானார்.
இந்தியாவில் கொரோனா
உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்துள்ள.து. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,761 ஆகவும் பலி எண்ணிக்கை 206 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதே வேளையில் நம் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கையும் 516 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மராட்டியம்தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 97 பேர் கொரோனாவல் இறந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம் உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 911 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3- இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு 898 பேரும், 4-வதாக தெலுங்கானாவில் 473 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர், மத்தியப் பிரதேசத்தில் 16 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில்
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்வு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இன்று மட்டும் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மாவட்டத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேருக்கும், சென்னையில் 9 பேருக்கும்,
நெல்லையில் 8 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மாலை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, “‘தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.” என்றார்.
தூத்குடியில் பெண் சாவு
தூத்துக்குடியில் இன்று ஒருவர் கொரோவால் இறந்தார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆகவும் உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-
சமூக பரவலா?
கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மூலமாக சமீபத்தில் 72 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சமூகப் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சமூக பரவல் இருக்கிறதா என்பதை அறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது .
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு ஊரடங்கை தற்பொழுது நீக்க வேண்டாம் என்ற வல்லுனர் குழுவின் ஆலோசனையை முதல் அமைச்சர் பரிசீலித்து வருகிறார். நாளை (அதாவது சனிக்கிழமை) பிரதமர் உடனான ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்வார்.
30 நிமிடத்தில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் ரேபிட் கிட்ஸ் கருவி இன்னும் வரவில்லை. மத்திய அரசே கொள்முதல் செய்து பிரித்து வழங்கும் என்பதால் இன்னும் நமக்கு ரேபிட் கிட்ஸ் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி பெண்ணுக்கு கொரோனா வந்தது எப்படி?
தூத்துக்குடியில் கொரோனாவல் இறந்த பெண்ணுக்கு வயது 70. இந்தப் பெண் வசித்த தெருவிலுள்ள ஒருவர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்திருக்கிறார். அருகிலுள்ள கடைக்குச் சென்றுவந்தபோது அவரிடமிருந்து இந்தப் பெண்ணுக்கு நோய் தொற்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இவரது மகனும் மருமகளும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுத் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் மருமகள் தனியார் மருத்துவமனையொன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.