May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் தனியார் நிறுவனங்கள்

1 min read

ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் தனியார் நிறுவனங்கள்

Private companies that are unable to pay employees

கொரோனாவால் பலருக்கு வேலையின்மையும் வறுமையும் ஏற்பட்டிருக்கும் சூழலில் பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த மார்ச் 20ம் தேதி இதுதொடர்பாக மத்திய அரசு அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும் விடுத்த அறிவிப்பில், ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டாம் என்றும் தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் அரசின் நோட்டீசையும் பொருட்படுத்தாத பல நிறுவனங்களின் அலட்சியப் போக்கை சுட்டிக்காட்டி தொழிற்சங்கங்கள் மத்திய அரசிடம் கடும் நடவடிக்கை எடுக்கும்படி கோரி வருகின்றன.

இது தொடர்பாக முக்கிய தொழிற்சங்கங்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், சிறுதொழில்களும் தினசரி கூலியாட்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாமல் திணறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பத்துசதவீத மக்கள் இதனால் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.