சார்வரி ஆண்டில் மழை எப்படி இருக்கும்?
1 min read
How is the rain in Sarwari year?
வைகாசி மாதம் தேய்பிறை சதுர்தசியானது வியாழக்கிழமை வருவதால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். நிலம் பூமியின் விலை குறையும். மேலும் ஜேஷ்ட சுத்த பிரதமை சனிக்கிழமை வருவதால் எங்கும் நல்ல மழை பெய்து வியாபாரரம் நன்றாக இருக்கும். இதுதவிர ஐப்பசி 8ந் தேதி சனிக்கிழமை பலனாக காலை 9.29 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிப்பதால் நல்ல மழை பெய்யும். பெரிய அணைகள், பாதாள சாக்கடை பாதிக்கும்.
மேகாதிபதி சந்திரன் பலனாக இந்த ஆண்டு ஒரு மரக்கால் மழையும் அஷ்ட திக்குகளில் புயலுடன் நல்ல மழையும் பெய்யும். மேலும் பூமி காரகனாகிய செவ்வாய் இந்த ஆண்டு யாருடனும் சம்பந்தப்படாமல் இருப்பதால் அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆவணி மாதம், ஐப்பசி மாதங்களில் ஒரு ஒளி தோன்றி மறைவதும், வெள்ளை நிறமுள்ள மேகங்கள் கோட்டை மேகமாக உற்ப்தியாகி எல்லா இடங்களிலும் மழையாக பொழியும். ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை சிறப்பான மழைக்கு வாய்ப்பு உண்டு. இதனால் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும். மும்பை, கொல்கத்தா மழையால் கடுமையாக பாதிக்கப்படும். தமிழகத்தில் திருச்சி, மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் வடமாநிலங்களில் அயோத்தி, காசி, கயா, நிலநடுக்கம் எற்படும்.
சாத்தனூர், மேட்டூர், பெரியாறு, வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, முக்கூடல், பவானி சாகர், பாபநாசம், அமராவதி, கபினி, மணிமுத்து£று, சிற்றாறு&1, சிற்றாறு&2, சோலையாறு, பரம்பிக்குளம், ராமநதி, கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, ஆகிய நதிகளில் வெள்ளம் ஏற்பட்டு அணைகள் நிரம்பும்.
வேலூர் மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேறும். ஊட்டி, ஜவ்வாது மலை, திருப்பதி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் நடு இரவு மற்றும் அதிகாலையில் இடி&மின்னலுடன் மழை பெய்யும்.
பசுநாயகர் கோபாலர் பலனை பார்க்கும்போதும் இந்த ஆண்டு காலத்தில் வனத்தில் மழைபெய்யும்.
நீண்ட கால கனவாக இருந்த நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு இந்த ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடத்தி நடைமுறைப்படுத்த நேரும்.
&தகவல்: ஆற்காடு பஞ்சாங்கம்