June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சார்வரி ஆண்டு எப்படி இருக்கும்? பஞ்சாங்க தகவல்கள்

1 min read

How is the Tamil year of “saarvari”? Panchangam information

சார்வரி ஆண்டு எப்படி இருக்கும்? பஞ்சாங்க தகவல்கள்
14/4/2020

இன்று தமிழ் புத்தாண்டு. இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தமிழக ஆண்டுகள் மொத்தம் அறுபது. விகாரி ஆண்டு முடிந்து சார்வரி ஆண்டு பிறக்கிறது. இது 34&வது ஆண்டாகும்.
மொத்தம் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று நம் முன்னோர்கள் கணித்து அதை வெண்பாவாக எழுதி வைத்து உள்ளனர். அந்த வகையில் இந்த விளம்பி ஆண்டுக்கு என்று எழுதப்பட்ட பாடல் வருமாறு.
சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள்- மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏலமின்றிச் சாவார் இயம்பு

இதன் பொருள் வருமாறு:-
சார்வரி வருடத்தில் பதினெட்டு சாதி மக்களும் நோயால் பாதிக்கப்படுவர், மழை போதுமான அளவு பெய்யாது. இதனால் பூமியில் விளைச்சல் குறைவாக இருக்கும். இதனால் ஏற்படும் உணவு தட்டுப்பாடால் பலர் இறக்கும் நிலை ஏற்படும்.
இதன் பொருள் இப்படி இருந்தாலும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கம் மேலே சொன்ன கெடுபலன்கள் இந்த ஆண்டு நடக்க வாய்ப்பு இல்லை என்றும் அதற்கான காரணத்தையும் விளக்கி உள்ளது. அதன் விவரத்தை இங்கே காணலாம்.
இந்த ஆண்டு மழை குறைவாக இருக்கும் என்று கூறினாலும் மேகாதிபதி சந்திரன் குரு வீட்டில் நட்பு கிரகமாக பலமாக இருப்பதால் காலத்தில் நல்ல மழை பொழியும். மேலும் சித்திரை வருடப்பிறப்பு புதன்கிழமை வருவதால் நல்ல மழை பொழிய வாய்ப்பு உள்ளது. அதேபோல் சித்திரை 1&ந் தேதி செவ்வாய்க்கிழமை வருவதாலும் ஆடி மாதம் 5&ந் தேதி திங்கட்கிழமை வருவதாலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாட்டில் மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை கணக்கிட்டு செயல்படுத்த நேரும். புதிய வைரஸ் நோய்களால் மக்கள் கால்நடைகள் கடுமையாக பாதிக்க நேரிடம். பொதுமக்கள் முன்வந்து பல உதவிகள் செய்து பல உயிர்களை காப்பாற்ற நேரும். வெளிநாட்டில் புழுதிக் காற்று, சூறாவளி மற்றும் பலமாக தாக்க நேரும். தான்யாதிபதி புதன் 6&ம் ஸ்தானத்தில் இருப்பதால் அனைத்து வியாபாரிகளும் ஜி.எஸ்.டி. படிதான் வியாபாரம் செய்ய நேரும். மளிகை, காய்களி, கனிவகை, தானியம் போன்றவை போன்றவை யாவும் விலை வீழ்ச்சி அடையும். நிரஸாதிபதி குரு மகரத்தில் நீசம் பெற்ற இருப்பதால் கோவில் அ£ச்சகர்களுக்கு ஆகாது. புதிய சட்டங்களால் தங்கும்விடுதி போன்றவைகளுக்கு போலீஸ் துறையினரால் அதிக கட்டுப்பாடு எற்படும். சார்வரி ஆண்டு பல மாற்றங்களை ஏற்படுத்தும். அமெரிக்கா, சீனா ஒத்துழைப்புடன் மத்திய அரசு கறுப்பு பணத்தை தன்வசம் படுத்த நேரும். கள்ளர்களின் தொல்லை குறையும். வழக்கறிஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும். நிலுவையில் உள்ள வழக்குகள் உடனுக்குடன் முடிக்க நேரும். டெங்கு உள்பட சொசுக்களினால் பல நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்க நேரும். அரசியலில் பல மாறறங்கள் அடிக்கடி நேரும். பல நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டு பல தீர்ப்புகளை அதிரடியாக அளிப்பர். குற்றவாளிககுக்கு தண்டனை உடனுக்குடன் கிடைக்கும்.

இவ்வாறு ஆற்காடு பஞ்சாங்கம் கூறியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.