சீக்கிரம் செட்டில் ஆக நினைக்கும் பிரபல நடிகையின் அடாவடி
1 min read
வரவர சீனியர் நடிகைகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். அந்த அளவு காசுக்காக எதையும் செய்ய துணிந்து விட்டார்களாம். எல்லாம் அந்த பாழாப் போன இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளத்தானாம்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் அந்த ஸ்வீட் நடிகை. பெரிய அளவில் நடிப்பு வரவில்லை என்றாலும் அப்போதிலிருந்தே கவர்ச்சியை காட்டி தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
அதுமட்டுமல்லாமல் வயதான நடிகர்களுக்கு ஜோடி போட தயங்குவதில்லை என்பதால் தொடர்ந்து அக்கட தேசத்தில் அந்த நடிகையை புக் செய்து வருகின்றனர். இருந்தாலும் தமிழில் முன்ன மாதிரி வாய்ப்பு இல்லை என புலம்புகிறாராம் அந்த நாயகி.
சரி இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என ஓவர் கவர்ச்சிக்கு ரெடி என தூது விட்டுள்ளாராம். காலம் போன காலத்தில் நடிகை ஏன் இப்படி புத்தி கேட்டு அலைகிறார் என விசாரித்த போது தான் தெரிய வந்துள்ளது அம்மணியின் பலே திட்டம்.
நடிகைக்கும் வயதாகிக் கொண்டே செல்வதால் முடிந்தவரை சினிமாவில் சுருட்டிவிட்டு செட்டிலாகிவிட வேண்டும் என எண்ணி விட்டாராம். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அம்மணி பிசினஸ் செய்தும் வருகிறார்.
தனது சகோதரியின் திருமணம் முடிந்து நீண்ட நாட்களாகி விட்டதால் தற்போது பெற்றோர்களின் பார்வை அம்மணி பக்கம் திரும்பி விட்டதாம்.
நம்மளும் இதற்குமேல் ஏமாற்ற முடியாது என இனி வரும் படங்களில் முடிந்த அளவு கவர்ச்சியாக நடித்து சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இன்னும் சொல்ல வேண்டுமானால் அரடவுசர் போட்டு நடிக்க சொன்னாலும் நான் ரெடி என்கிறாராம் அந்த நாயகி. இதனால் நீண்ட நாட்களாக அந்த நாயகியின் மீது கண்கள் வைத்திருந்த தயாரிப்பாளர்கள் இதுதான் சாக்கு என அம்மணியை சுற்றி வருகிறார்களாம்.
நானும் இதைத்தான் எதிர்பார்த்தேன் என மொத்த பேரையும் வளைத்துப் போட்டு விட்டாராம் அந்த ஸ்வீட் நாயகி. அடுத்ததாக தமிழ் சினிமாவில் டாப் நடிகரின் இரண்டாம் பாக படத்திலும் இவர்தான் நாயகியாம்.