தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
1 min read
Another 31 people confirmed corona in tamilnadu
தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;
- 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 28,711 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர். அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை 19,255 பேர் மாதிரிகள் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
- 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்தவர்கள் 68,519 பேர்.
- மருத்துவ பரிசோதனை தொடங்கியதில் இருந்து அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
- மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுவது மிகவும் தவறு. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 81 பேர் குணமடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
- அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும்போது 60 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.