நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்
1 min read
15.4.2020
சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கங்கள் தினமும் காலையில் எழுந்து காபி குடிப்பதை போல சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. பல நடிகைகள் இதற்கு எதிராக குரல் கொடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிகைகளை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மீ டு என்ற ஒரு அமைப்பு தொடங்கியும் இந்தப் பிரச்சனை முடிவதாக இல்லை.
பல வெப் தொடர்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மானவி கக்ரு. சமீபகாலமாக இவரது அழகில் மயங்கி பல தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களது படங்களில் நடிக்கவைக்க இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
அப்போதுதான் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை தொலைபேசி வாயிலாக படுக்கைக்கு அழைத்ததாக புகார் அளித்துள்ளார் இந்த நாயகி. அவர் கூறியதாவது, வெப் தொடர் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதில் என்னை நாயகியாக நடிக்க வைப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் சம்பளத்தை பற்றி விசாரித்தார்.
கதை பிடித்த பிறகு மற்றவற்றை பேசிக்கொள்ளலாம் என நடிகை கூறியதாகவும், அதற்கு மானவி சொன்ன சம்பளத்தை விட மேலும் மூன்று மடங்கு பணம் அதிகமாக தருவதாகவும் தெரிவித்துள்ளார் அந்த இயக்குனர்.
இதனால் வியப்படைந்த நாயகி முதலில் கதையை கூறுங்கள் என்று கூறியதற்கு, மூன்று மடங்கு பணம் தருகிறேன், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அந்த இயக்குனர் கட்டளையிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் போன் வாயிலாகவே அவரை கண்டபடி திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா வட்டாரங்களில் பலர், சினிமாவில் கவர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் இப்படித்தான் அழைப்பு வரும் என கிசுகிசுக்கின்றனர்.