நடிகையின் தாராள மனசுக்கு தடைபோட்ட காதலர்
1 min read
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அந்த முன்னணி நடிகை. ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நாயகியாக வலம் வந்தார். அதன் பிறகு இளம் நடிகர் ஒருவரை காதலித்து அவர்கள் செய்யும் அந்தரங்க விஷயங்களை கூட புகைப் படங்களாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப பழக்கம் ஏற்பட்டு கொஞ்ச நாட்களிலேயே அந்த நடிகரைப் பிரிந்தார் அந்த முன்னணி நடிகை. அதன்பிறகு பிரபல இயக்குனரின் மீது காதலில் விழுந்தார் அந்த பிரபல நாயகி.
அவருடனும் வேண்டுமளவுக்கு சுற்றிவிட்டு இருவருக்கும் செட் ஆகாது என டீசண்டாக பிரிந்து விட்டனர். பிறகு காதலும் வேண்டாம் கத்திரிக்காய் வேண்டாம் என இருந்த பிரபல நடிகையை எப்படியோ உஷார் செய்து விட்டார் அந்த மொக்கை இயக்குனர்.
அந்த இயக்குனர் இயக்கிய ஒரே ஒரு படம் தெரியாத்தனமாக ஹிட்டடித்து விட்டதால் தற்போது வரை தான்தான் பெரிய இயக்குனர் என்பதை போல பந்தா காட்டுகிறாராம். அதுமட்டுமில்லாமல் நடிகை செய்யும் தனிப்பட்ட விஷயங்களில் நிறைய மூக்கை நுழைக்கிறாராம்.
இப்படி செய்தால் நடிகைக்கு பிடிக்காது என்றும் விரைவில் கழட்டிவிட்டு விடுவார் எனவும் அவருடைய முன்னாள் காதலர்கள் பலரிடமும் கூறி வருகிறார்களாம். நடிகையின் தாராள மனசு என்ன வென்றால் தான் முன்னாள் காதலித்த அனைவருக்கும் நடிகையே வலியப்போய் செலவு செய்வாராம்.
அதேபோல் தான் தற்போது ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நாயகி தனது துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரிய அமௌன்ட்டை கொடுக்க இருந்தாராம்.
ஆனால் இந்த காதலன் இடையில் புகுந்து அவ்வளவு எல்லாம் ஒன்றும் கொடுக்க வேண்டாம் எனவும், முன்னணி நடிகர்களே குறைவாகத்தான் கொடுத்திருக்கிறார்கள் எனவும் அட்வைஸ் செய்து நடிகையின் தான தர்மத்திற்கு தடை போட்டு விட்டாராம்.
இருந்தாலும் நடிகைக்கு படவாய்ப்புகள் அதிகம் வராத நிலையில் இருப்பதால் இவரை விட்டால் வேறு ஆள் கிடைக்காது என காதலன் சொல்வதே வேதவாக்கு என கடைபிடித்து வருகிறாராம் அந்த முன்னணி நடிகை