July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பாதிப்பு; குழந்தையை பெற்றெடுத்த நர்சு சாவு

1 min read
Seithi Saral featured Image

The nurse died by Coro after taking the baby.

16/4/2020

கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி நர்சு குழந்தையை பெற்றெடுத்துவிட்டு இறந்தார்.
இந்த பரிதாப சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடந்தது.

நர்சுகள் இறக்கும் பரிதாபம்

உலகம் எங்கும் பரவி உள்ள கொரோனா இங்கிலாந்து நாட்டையும் விட்டுவைக்கவில்லை. அந்த நாட்டு பிரதமர்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார்.
அந்த நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்களையம் தொற்றிக் கொண்டது. இதனால் இதுவரை சுமார் 30 நர்சுகள் இறந்துள்ளனர்.

நர்சு

தற்போது ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியான நர்சு குழந்தையை பெற்றெடுத்து இறந்துவிட்டார். அந்த நர்சுக்கு வயது 28 தான்.

இங்கிலாந்து நாட்டின் நல்வாழ்வுத் துறையில் நர்சாக சேவையாற்றி வந்த இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடைய உடல்நிலை ஓரளவு தேறி வந்தது. இதனால் அவர் குழந்தையை பெற்றெடுக்கும் முன் பூரண குணம் அடைந்து விடுவார் என்று டாக்டர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நர்சுக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது.

இதனால் நர்சை பரிசோதித்த டாக்டர்கள் அவரால் இயக்கையாக(சுக பிரசவமாக) குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என்பதை உணர்ந்தனர். இதனால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்றுவது என முடிவெடுத்தனர்.

உடனடியாக நர்சுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இறந்தார்

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் நர்சு பரிதாமான இறந்தார். அந்த நர்சு அறுவை சிகிச்சையின்போதே இறந்தாரா அல்லது குழந்தை பிறந்த பின்னர் இறந்தாரா என்பது தெரியவில்லை.
பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எத்தனையோ பேரின் உயிரை காப்பாற்ற போராடிய நர்சு தன்னையே அழித்த மெழுகுவர்த்தியாக விளங்குகிறார். அந்த தியாத்தின் மறு உருவாக பிறந்த குழந்தை சிறப்பாக வாழ வேண்டும் என்று பலரும் வேண்டுகிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் மருத்துவப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் மரணம் பற்றியும் விரிவாக விசாரித்தறியப்படும் என்று நல்வாழ்வுத் துறை மந்திரி மேட் ஹன்காக் உறுதியளித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.