குளம், கண்மாய் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி
1 min read
Allow farmers to take pond, eye and soil freely
6-5-2020
குளம், கண்மாய் போன்ற நீர் நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.
கரம்பை மண்
குளம், கண்மாய்களில் உள்ள கரம்பை மற்றும் வண்டல் மண் விவசாய பயிர்களுக்கு நல்ல உரமாகும். ஒரு காலத்தில் விவசாயிகள் இதை அள்ளி பயன்படுத்தி வந்தனர். ஆனால் பின்னர் இதற்கு அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் இந்த மண்ணை விவசாயிகள் பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்து்ள்ளது.
இந்த ஆண்டும் அதேபோல் மண் அள்ள தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்ட விவசாயிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டை தடுக்க வேண்டும்
இப்படி மண் அள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் சிலர் செங்கல் சூளை அமைக்க மண்ணை எடுப்பார்கள் . இதை அரசு கண்காணிக்க வேண்டும்.