June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் விரைவாக பரவும் கொரோனா; ஒரே நாளில் 771 பேருக்கு பாதிப்பு

1 min read
Seithi Saral featured Image


Corona spread rapidly in Tamil Nadu; 771 people affected overnight

6.5.2020

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பரவும் கொரோனா

தமிழத்தில் கொரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதி்ல் இருந்து அது அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விரைவாக பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அது தன் வேகத்தை காட்டித்தான் வருகிறது.

நேற்றைய(செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி தமிழகத்தில் 4 ஆயிரத்து 58 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. இதில் 1,485 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 33 பேர் பலியாகி இருந்தனர்.

771 பேருக்கு உறுதி

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ,829 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,516 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அதற்கு அடுது்தபடியாக அரியலூரில் 188 ஆக உள்ளது.

மாவட்டம வாரியாக…

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்வர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-

சென்னை- 324
அரியலூர் – 188
காஞ்சிபுரம் – 45
மதுரை-20
கடலூர்-95
திருவள்ளூர்-34
திருவண்ணாமலை-17
செங்கல்பட்டு -9
திண்டுக்கல் – 9
கரூர் – 1
கிருஷ்ணகரி- 2
பெரம்பலுர்-3
புதுக்கோட்டை- 2
சேலம்- 1
தென்காசி- 1
தஞ்சாவூர்-1
தேனி-2
திருப்பத்தூர்-1
திருவாரூர்-1
தூத்துக்குடி-2
நெல்லை-1
திருச்சி-1
வேலூர்-6
விழுப்புரம்-5

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.