காதலியை அழைத்து வர ஆம்புலன்சுடன் சென்ற வாலிபர் கைது; நண்பர்களும் சிக்கினர்
1 min read
3 persion arrested in ambulance for escorting girl friend
7-5-2020
கேரளாவில் காதலியை அழைத்துவர ஆம்புலன்சுடன் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பர்களும் கைதானார்கள்.
காதலி
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சிவாஜித். இவருக்கும் கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களானார்கள். பின்னர் அது காதலாக மாறியது.
காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய விரும்பினார்கள். ஊரடங்கு காரணமாக அவர்கள் சந்திக்கவே முடியவில்லை. மேலும் முறைப்படி திருமணம் செய்ய தடைகள் வரும் என்று அஞ்சினார்கள். இதனால் காதலி தன்னை எப்படியாவது அழைத்துச் செல்லுமாறு தனது காதலர் சிவாஜித்துக்கு தக வல் அனுப்பினார்.
ஆம்புலன்ஸ்
கொரோனா ஊரடங்கு காலத்தில் எப்படி செல்வது என்று அவர் யோசித்தார். பின்னர் சாலையில் ஆம்புலன்ஸ் மட்டும் தடையில்லாமல் செல்வதை பார்த்துள்ளார்.
எனவே தனது நண்பர்கள், சபீஸ், அல்போன்ஸ்
ஆகியோருடன் சேர்ந்து ஒரு ஆம்புலன்சை பிடித்து காதலியை அழைத்து வர சென்றார். மூன்று பேரும் ஆம்புலன்சில் கோழிக்கோடு அருகே உள்ள வடகரா பகுதியில் சென்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து ஆய்வு செய்தனர். அவர்கள் சென்ற ஆம்புலன் செஞ்சிலுவை சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஆகும். அவர்களிடம் விசாரித்தபோது 3 பேரும், நோயாளிகளை ஏற்றிச் செல்ல வந்துள்ளதாக கூறினார்கள். அதை உண்மை என்று நம்பிய போலீசார் அவர்களை அனுப்பிவிட்டனர்.
கைது
ஆனால் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் அதே பகுதியில் சுற்றி வந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் அவர்களை மீண்டும் அழைத்து துருவிதுருவி விசாரித்தினர்.
அப்போது முன்னுக்குப்பின் முரணமாக பதிலளித்தனர். தொடர்ந்து விசாரிக்கவே உண்மையை கூறினர்.
இதனை அடுத்து சிவாஜித், சபீஸ், அல்போன்ஸ் ஆகிய மீதும் ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.