June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா உறுதி

1 min read

Corona confirmed 316 people in one day in Chennai

7/5/2020

சென்னையில் இன்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்திலும் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இன்று(வியாழக் கிழமை) ஒரே நாளில் தமிழகத்தில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 316 பேருக்கு இருப்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2644 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணுக்கை 5,409 ஆக அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்கதில் இன்று 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனை அடுத்து மொத்தம் 37பேர் இறந்துள்ளனர்.  

.

மாவட்ட வாரியாக

மாவட்ட வாரியாக இன்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

சென்னை 316

திருவள்ளூர்-63

விழுப்புரம்-45

பெரம்பலூர்-33

கடலூர்-32

அரியலூர்-24

திருவண்ணாமலை -17

செங்கல்பட்டு-13

ராணிப்பேட்டை-7

திருச்சி-5

கிருஷ்ணகிரி-4

தேனி-3

நெல்லை-3

தஞ்சாவூர்-2

ராமநாதபுரம்-2

புதுக்கோட்டை-2

காஞ்சிபுரம்-2

கள்ளக்குறிச்சி-1

வேலூர்-1

தூத்துக்குடி்-1தர்மபுரி 1

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.