இந்தியாவில் 52,952 பேருக்கு கொரோனா பாதிப்பு ; சாவு எண்ணிக்கை 1,783 ஆக உயர்வு
1 min read
Coronation affects 52,952 people in India; Death toll rises to 1,783
7-5-2020
இந்தியாவில் 52,952 பேUf;F கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,783 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகள் எல்லாம் பாடாய் படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.
அதன்படி கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று(வியாழக்கிழமை) காலை கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 49,391 ஆக இருந்தது. அது இன்று 52,952 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 1,694 ஆக இருந்தத. அது இன்று 1,783 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு பூரண நலம் பெற்றவர்கள் எண்ணிக்கை 14,183 லிருந்து 15,267 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.