18-ந்தேதி முதல் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டம்
1 min read
Tamilnadu government plans to run buses from 8th
7-5-2020
ஊரடங்கு நிறைவடைந்த பிறகு 18-ந் தேதி முதல் அரசு பஸ்களை 50 சதவீத பயணிகளுடன் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பஸ்கள் நிறுத்தம்
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து அடியோது நிறுத்ப்பட்டது. பின்னர் சரக்கு வாகனங்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
ஊரடங்கு இரண்டு முறை நீட்டிப்பட்டது. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் கடந்த 4-ந் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதற்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. சில தொழில்களையும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
18-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கம்
தொழில் நிறுவனங்கள் செயல்பட்டாலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் செல்ல போக்குவரத்து வசதி இல்லை. எனவே ஊரடங்கு நிறைவு பெறும் 17-ந் தேதிக்கு பிறகு அதாவது 18-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பஸ்களை இயக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு வசதியாக போக்கு வரத்து கழகங்களை தயாராக இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பஸ்களை இயங்க தயாராக இருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்கப்படும்.
பேருந்து இயக்குவதற்கு முன் ஓட்டுனர், நடத்துனர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பயணிகள் இருக்கையில் அமர “மார்க்“ செய்ய வேண்டும். பேருந்தில் நின்று பயணம் செய்தால் போதிய இடைவெளி அவசியம். கட்டாயம் பேருந்தின் ஜன்னல் திறந்திருக்க வேண்டும். பேருந்து நிலைய நிறுத்தத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதிக கூட்டம் கூடாதவாறு பயணிகள் 6 அடி இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.
பயணிகள் முக கவசம்
பேருந்தில் பயணம் செய்ய வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். தவறினால் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல் கூகுல் பே, இ-பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். முடிந்தளவு மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.
பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகள் இயக்க திட்ட மிடும்போது இது போன்ற நடவடிக்கை பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களும் இதை கவனமுடன் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது..
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
25 நிபந்தனைகள்
பொது ஊரடங்கு முடிந்த பிறகு கொரோனா பாதிக்காத பகுதிகளில் முதலில் பஸ்களை இயக்க அனுமதிப்பார்கள் என எதிர் பார்க்கிறோம். அனேகமாக வருகிற 18-ந்தேதி பஸ்கள் ஓடும் என்று தெரிகிறது.
இது சம்பந்தமாக அரசு உத்தரவுகளை பின்பற்றி பஸ்களை இயக்க தயாராகவே உள்ளோம். இதற்காக அரசு 25 நிபந்தனைகளை கடைபிடிக்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
குளிர்சாதன வசதிகள் கொண்ட பஸ்களை இயக்க வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா தொற்று பரவியுள்ள பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாது. மற்ற பகுதிகளில் பஸ்களை இயக்க நாங்கள் தயாராகி வருகிறோம்.
அரசு எப்போது உத்தரவு பிறப்பித்தாலும் பஸ்களை இயக்குவதற்கு நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.