June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

12-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது; முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

1 min read

Rail traffic starts from 12th; Reservations only allowed

10-5-2020

இந்தியாவில் 12-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது. முதல்கட்டமாக டெல்லியிலிருந்து 15 சிறப்பு ரெயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கும்.

ரெயில் போக்குவரத்து

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் மாதம் 24 -ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ரெயில்களை படிப்படியாக இயக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்பதிவு

மே 12 முதல் பயணிகள் ரெயில் சேவையை படிப்படியாக தொடங் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, 11-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் தொடங்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

சென்னை, மும்பை, திருவனந்தபுரம், செகந்திராபாத், பெங்களூரு, திப்ருகர், ஆமதாபாத், ஜமுதாவி, அகர்தலா, ஹவுரா, பாட்னா, ராஞ்சி, புவனேஷ்வர், பிலாஸ்பூர் ஆகிய ஊர்களுக்கு டெல்லியிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று இல்லாமலும், மாஸ்க் அணிந்து வருபவர்கள் மட்டுமே ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.