1,000 கி.மீ . தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிள் புறப்பட்ட தொழிலாளி; பாதிதூரம் சென்ற போது விபத்தில் சிக்கி பலி
1 min read
1,000 km Cyclist to a remote hometown; Accident kills while traveling halfway
10-5-2020
ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற தொழிலாளி பாதி வழியில் கார்மோதி பரிதாபமாக இறந்தார்.
சொந்த ஊருக்கு
கொரோ பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பபட்டதால் விபத்துக்கள் பெருமளவு குறிந்துள்ளன. ஆனால் ஊரங்கு காரணமாக சில விபத்துக்களும் உயிர்பலிகளும் ஏற்பட்டு உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் சொந்த ஊருக்கு நடந்தே சென்றவர்கள் தண்டவாளப்பகுதியில் படுத்து தூங்கியபோது ரெயில்மோதி 14 பேர் உயிர் இழந்த சம்பவம் நிகழ்ந்தது.
கடந்த 7-ந் தேதி, சத்தீஸ்கரை சேர்ந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சொந்த ஊர் செல்லும்போது சென்றபோது விபத்தில் சிக்கி கணவன் – மனைவி இருவரும் இறந்தனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.
சைக்கிளில் சென்றவர்
இதேபோல் இப்போது சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்றவர் விபத்தில் சிக்கி இறந்துள்ளார். அவரது பெயர் சாகிர் அன்சாரி(வயது 26). பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் பகுதியைச் சேர்ந்தவர்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 7 பேரும் டெல்லியில் வேலை செய்து வந்தனர்.
தற்போது ஊடரங்கு காரணமாக 1000 கிலோ மீட்டர் தூரம் உள்ள தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். அவர்கள், சைக்கிளில் கடந்த (மே மாதம்) 5-ந் தேதி புறப்பட்டனர்.
பாதி தூரத்தை கடந்து லக்னோ செல்ல 5 நாட்கள் ஆனது. இந்த நிலையில் நேற்று (மே 10-ந் தேதி) காலை 10 மணியளவில் அவர்கள் ரோட்டில் தடுப்பில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது.
சாவு
இதில் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மற்றவர்கள் தூக்கி வீசப்பட்டு லேசான காயம் அடைந்தனர்.
பலத்த காயமடைந்த அன்சாரியை, உடன்சென்ற நண்பர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
விபத்தை ஏற்படுத்திய. காரை ஓட்டிய டிரைவர் முதலில், இழப்பீடு தொகை கொடுப்பதாக கூறினார். ஆனால் பின்னர் மறுத்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மோதிய கார் லக்னோ பதிவு எண்ணை கொண்டதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள். உயிரிழந்த அன்சாரிக்கு, மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.