பிட்டு நாயகியாக மாறியும் வாய்ப்பு கிடைக்காததால் நடிகை கவலை
1 min read
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி இயக்குனருடன் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் தான் அந்த பிரபல நடிகை. அறிமுக படம் ஹிட் என்பதால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் அதில் ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் அனைத்துமே ஊத்திக் கொண்டது.
இதனால் சொந்த ஊர் பக்கம் சென்ற அந்த நாயகியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது அந்த பிரபல சேனல். அங்குதான் அம்மணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. தன்னுடைய நேர்மையை தனத்தால் மொத்த இளைஞர்களையும் கட்டிப்போட்ட நாயகி ஆர்மி ஆரம்பிக்கும் ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணினார்.
அதுமட்டுமல்லாமல் பெண் சுதந்திரம் என்பதையும் அடிக்கடி முன்னிறுத்தி வைத்த அந்த நாயகியை அதே கதையில் நடிக்க வைத்து சினிமாவை விட்டு துரத்திவிட்டார்கள். அம்மணி பெண் சுதந்திரம் சார்பாக நடித்த படத்தில் பிட்டு படத்தை விட மோசமான காட்சிகளில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார் அந்த நாயகி.
அதன் பிறகு அந்த நாயகியை ஏறெடுத்து பார்க்க ஆள் இல்லாமல் போய் விட்டாராம். பத்தாதற்கு காதல் தோல்வி வேறு. இருந்தாலும் இருவரும் அவ்வப்போது ஒன்றாக இருந்து வருகிறார்கள் என்ற செய்தி அரசல் புரசலாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நல்ல கதைகள் வரும் என பொறுத்து பொறுத்து பார்த்த நாயகிக்கு எதுவுமே செட்டாகாததால் மீண்டும் கவர்ச்சியில் தாறுமாறாக இறங்கிவிட்டாராம் அந்த நாயகி. சமீபத்தில் அவரது இணையதள பக்கத்தில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு வெளியிட்ட போட்டோ படு வைரல் ஆனது.
இதனால் மீண்டும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூட்டம் அலை மோதுவதால் செய்திகள் கிடைத்துள்ளது. இருந்தாலும் அம்மணி என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம் என்கிறார்கள்.