கவர்ச்சி வேண்டாம் என்று ஒதுங்கிய நாயகி -ஆசை காட்டும் தயாரிப்பாளர்கள்
1 min read
தமிழ் சினிமாவில் சீரியலில் இருந்து படையெடுக்கும் நாயகிகள் மத்தியில் தற்போது முன்னணி நாயகியாக கலக்கி வருபவர் தான் அந்த நாயகி. இந்த நாயகி நடிக்கும் அனைத்து படங்களும் சமீப காலமாக வெற்றி பெற்று வருவதால் அம்மணியின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகியை கவர்ச்சியான வேடத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் அவரை அணுகி உள்ளனர். ஆனால் நாயகி என்னுடைய உடல் கவர்ச்சிக்கு ஏற்ற மாதிரி இல்லையே என சாக்கு சொன்னாராம்.
அதுமட்டுமில்லாமல் தான் ஒரு குடும்ப குத்துவிளக்கு நாயகி எனவும் சீன் போட்டாராம். உடனடியாக அம்மணியின் பழைய கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துக் காட்டினார்களாம் அந்த இயக்குனர்கள். அது வேறு ஒன்றும் இல்லை. அம்மணி சீரியலில் நடிக்கும்போது முக்கால்வாசி காட்சிகளில் டிரான்ஸ்பரன்ட் சாரி அதாவது உடலை அப்படியே வெளிக்காட்டும் லேசான சேலையில் நடித்த காட்சிகளை எடுத்து காட்டினார்களாம்.
சரி சரி, அதெல்லாம் அப்போ, இப்போ நான் யோக்கியமாக திருந்திட்டேன் என சமாளித்தாராம் நாயகி. இந்த கதையெல்லாம் எங்களிடம் வேண்டாம், அடிக்கடி தொடையை காட்டி போட்டோ போடுறது எங்களுக்கு தெரியாதா எனவும் கேட்டார்களாம்.
தொடையை காட்டின மாதிரி மேலேயும் கொஞ்சம் இறக்கி கட்டினால் வேலை முடிந்தது என சமாதானம் சொல்லி பேசி வருகிறார்களாம் இயக்குனர்கள். அதுமட்டுமல்லாமல் சம்பளமும் டபுள் மடங்கு கிடைக்கும் என்பதால் அந்த நாயகியும் ஓகே சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.
கண்டிப்பாக அம்மணி கவர்ச்சியில் இறங்கினால் பல முன்னணி நாயகிகளின் பாடு திண்டாட்டம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். கோலிவுட்டிலேயே பலருக்கு அம்மணியின் மேல் ஓர் எக்கு தப்பான கண்ணோட்டம் உள்ளதாம். அதை படம் எடுப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என வெறியுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அம்மணி கொஞ்சம் உஷார் பார்ட்டி என்கிறார்கள் அவரின் நெருங்கிய வட்டாரங்கள்.