June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கோயம்பேடு தந்த கொரோனா பாடம்

1 min read

The Coronation Lesson from Coimbatore

14 -5-2020

கொரோனாவுக்கு கோயம்பேடு தந்த பாடம்

சென்னையில் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்த கோயம்பேடு மார்கெட்டுக்குப்பதில் சென்னையில் குறைந்தது 4 இடங்களில் மார்க்கெட்டுகளை அமைத்திருக்க வேண்டும்.

சென்னையில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் முதலில் மந்தமாகவே இருந்தது. ஆனால் படிப்படியாக பரவல் வேகம் அதிகரித்தது. பெரிய நாட்டில் கொரோனா பரவல் என்பது இருக்கத்தான் செய்யும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில்தான் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் மக்கள் நெருக்கடி என்று கூறப்பட்டது. அது உண்மைதான்.

கொரோனா பரவலை போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் மிகவும் கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர். எங்கும் மக்களை நின்ற கூட அனுமதிக்கவில்லை. சாலையில் செல்வோரை கெஞ்சியும் கண்டித்தும் கட்டுப்படுத்தினார்கள். இதற்காக போலீசார் பொதுமக்களிடம் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார்கள்.

அப்படி கட்டுபடுத்திவரும்போதுதான் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரேனா விஸ்வரூபம்  எடுத்தது. அங்கு வந்தவர்கள் வியாபாரிகள் மூலம் வேகமான பரவியது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை

சாலையில்  திரிவோரை கட்டுப்படுத்திய போலீசாரால் கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுப்படுத்த முடியவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி வாழப்பாடி பேசும்போது,கோயம்பேட்டில் கொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் கொரோனா வேகமாக பரவியதாக கூறினார். அது உண்மைதான்.

பொதுமக்கள் எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் கூடிவிடுவார்கள். அவர்கள் எச்சரிக்கையாக இருந்திருந்தால் கொரோனா இந்தியாவில் பரவியே இருந்திருக்காது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மாட்டார்கள் என்பதால்தான் ஊடரங்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இல்லாததால்தான் போலீசார் அடித்தும் மிரட்டியும் கெஞ்சியும் பொதுமக்களை ரோட்டில் செல்ல வேண்டாம் என்றார்கள்.

அப்படி இருக்கும்போது பொதுமக்கள் அதிகமாக கூடும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திறந்திருக்க கூடாது. காரணம் மகாநகரமான சென்னைக்கு ஒரே மார்க்கெட் அதுதான். அதே மார்க்கெட்டில்தான் சில்லறை விற்பனையும் நடக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கவில்லை என்றால் பொதுமக்களுக்கு காய்கறி வேண்டாமா என்று கேட்கலாம். கொடும் நோயைவிட காய்கறி ஒன்றும் பெரிது அல்ல.

கோயம்பேடு மார்க்கெட்டை திறந்திருக்க கூடாது என்று சொல்கிறோம். அதே நேரம் காய்கறி மார்க்கெட்டை பல்வேறு பகுதிகளில் பிரித்து வைத்திருக்கலாம்.

நெல்லை கலெக்டர்

இதற்கு எடுத்துக்காட்டை நெல்லை மாவட்டத்தை குறிப்பிடலாம். அந்த மாவட்ட கலெக்டர் ஷில்பா கொரோனா பரவல் தொடங்கிய உடனேயே பொதுமக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட்டை மூடினார். அதுவும் மொத்தம் 3 மார்க்கெட்டை மூடினார். அதவாது நெல்லை டவுனில் உள்ள மார்க்கெட், மொத்த கடை உள்ள மார்க்கெட் (தச்சநல்லூர் மார்க்கெட்), பாளையங்கோட்டை மார்க்கெட்  ஆகியவை மு்டப்பட்டன. அதற்குப்பதில் திறந்தவெளி மார்க்கெட்டை அமைக்க உத்தரவிட்டார். அதுவும் ஒரே நடத்தில் அல்ல. நெல்லை புது பஸ்நிலையம், பொருட்காட்சி திடல், வ.உ..சி. மைதானம். பெல் மைதானம் ஆகிய இடங்களில் மார்க்கெட்டை இயங்க நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக மேலப்பாளையத்தில் பரவிய கொரோனாவைகூட விரைவில் முடிவுக்கு கொண்டு வந்தார். தற்போது கூட சென்னயைில் இருந்து சென்றவர்கள் மூலம்தான் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

திருமழியிசை மார்க்கெட்

அதேபோல் சென்னையில் காய்கறி மார்க்கெட்டை பிரித்து பல்வேறு இடங்களில் வைத்திருக்க வேண்டும். தற்போது கோயம்பேடு  மார்க்கெட்டை மூடிய நிலையில் திருமழியிசையில் மட்டும் மார்க்கெட்டை வைத்திருப்பது தவறு. சென்னையில் பல்வேறு இடங்களில் பஸ்நிலையம், விளையாட்டு மைதானங்களில் மார்க்கெட்டை அமைத்திருக்கலாம். இப்போது கூட இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம். கொரோனா காலம் முடிந்தாலும்கூட சென்னைக்கு குறைந்த பட்சம் 4 பொது காய்கறி மர்க்கெட் வேண்டும். 4 பொது பஸ்நிலையம் வேண்டும். இதை இப்போதே நடைமுறைபடுத்தலாம். அதுதான் பெருகி வரும் ஜனத்தொகையை சமாளிப்பதற்கு வழி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.