June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் புதிதாக 310 பேருக்கு கொரோனா

1 min read


Coronation for 310 new recruits in Chennai

15-5-2020

சென்னையில் இன்று ஒரே நாளில் 310 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தம

தமிழகத்தில் கொரோனா

இந்தியாவில் பரவிய கொரோனா தமிழகத்திலும் தலைகாட்டியது. கடந்த 1-ந் தேதி முதல் படிப்படியாக கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் கொரோனா எண்ணிக்கை சற்று சுறைந்தது.

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை ) புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மாலத்தீவில் இருந்து சென்னை வந்த ஒருவரும் அடக்கம்.
சென்னைக்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 21, செங்கல்பட்டில் 20, காஞ்சியில் 11, மதுரை, தேனியில் தலா 6, கடலூர், திருவண்ணாமலையில் தலா 3, பெரம்பலூரில் 2, திண்டுக்கல், தென்காசி, தஞ்சை, விருதுநகரில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மொத்த பாதிப்பு 5,946 ஆக உயர்ந்தது.

5 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இதில் 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 53 வயது பெண், 61, 57, 32 வயது நிரம்பிய ஆண்கள் என 4 பேர் சென்னையில் உயிரிழந்தனர். இன்னொருவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற் று இதுவரை 783 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.