உ.பி. விபத்தில் சிக்கி 24 பேர் பலி; லாரியில் சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
1 min read
24 killed in UP trucks Accident while traveling to hometown in lorry
16-5-2020
ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு லாரியில் சென்றவர்கள் இன்னொரு லாரி மோதிய விபத்தில் சிக்கி 24 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
சொந்த ஊருக்கு
கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் வந்து கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
தற்போதுதான் சிறப்பு ரெயில்கள் விடப்படுகின்றன. ஆனாலும் அந்த ரெயிலில் இடம் கிடைக்குமோ… அதற்கு எவ்வளவு பணம் செலவாகுமோ என்ற அச்சத்தில் நடந்து, சைக்கிளில், லாரியில் என தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.
இதில் வேதனை என்னவென்றால் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு இப்படி பணம் செய்கிறார்கள். அவர்களில்தான் பலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.
அதேபோல விபத்துதான் இன்று அதிகாலை உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
லாரியில்…
ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் சிலர் ஒரு லாரியில் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று புறப்படடனர். இவர்கள் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் சென்ற லாரி இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள அவுரியா அருகே மிகாலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இன்னொரு லாரி அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
24 பேர் பலி
இந்த விபத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்களில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்துக் குறித்த அறிந்த உ.த்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்
முதல்-மந்திரி அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் “ அவுரியாவில் நடந்த விபத்துக் குறித்து முதல்-மந்திரி கேட்டறிந்தார். விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சையும் வழங்க உத்தரவி்ட்டுள்ளா். கான்பூர் போலீஸ் ஐ.ஜி.யை உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரிக்கவும், மீட்புப்பணிகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டு உள்ளது.
தொடரும் விபத்துக்கள்
இப்படி சொந்த ஊருக்கு சென்ற
தொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்தின் தொடக்கத்தில் மத்தியப்பிரதேசம், பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 15 பேர் பல்வேறு விபத்துகளில் இறந்தனர்.
கடந்த 8-ந் தேதி மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் ரெயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 16 பேர் தொழிலாளர்கள்மீது சரக்கு ரெயில் ஏறியதில் 16 பேர் பலியானார்கள்.
9-ந் தேதி மத்தியப்பிரதேசம் நரசிங்கபூர் மாவட்டத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.
14-ந் தேதி மராட்டிய மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு லாரியில் பயணித்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர். அந்த லாரி மற்றொரு லாரி மீது மத்தியப்பிரதேசம் குணா பகுதியி்ல் விபத்தில் சி்க்கியதில் 8 பேர் பலியானார்கள் 55 பேர் காயமடைந்தனர்.
இதுபோன்ற விவத்துக்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் சொந்த ஊருக்கு செல்ல உதவ வேண்டும்.