வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 93 பேருக்கு கொரோனா; சென்னையில் 332 பேருக்கு, இன்று உறுதி
1 min read
Corona for 93 in tamil nadu those from abroad and abroad
16/5/2020
சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் வெளிநாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 93 பேருக்கும் கொரோனா இருப்பது இன்று உறுதியானது.
கொரோனா
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்திலும் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் பாதிப்பு பரவி வருகிறது.
இன்று(சனிக் கிழமை) ஒரே நாளில் தமிழகத்தில் 384 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 332 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
செங்கல்பட்டு-13, திருவள்ளூர்-10, திருவண்ணாமலை-7, காஞ்சிபுரம் 4, கள்ளக்குறிச்சி-3, மதுரை-3. திண்டுக்கல்-2, நாகப்பட்டுனம்-2. விழுப்புரம்-2. செங்கல்பட்டு- 5, திருவள்ளூர்-5, மேலும் கன்னியாகுமரி, ராணிபேட்டை, தென்காசி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்
இதுதவிர வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 93 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டு உள்ளது.
மாராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வந்த 44 பேருக்கும், கள்ளக்குறிச்சிக்கு வந்த 14 பேருக்கும், சிவகங்கைக்கு வந்த 9 பேருக்கும், தூத்துக்குடிக்கு வந்த 6 பேருக்கும், தென்காசிக்கு வந்த 4 பேருக்கும், கன்னியாகுமரிக்கு வந்த ஒருவருக்கும், மதுரைக்கு வந்த ஒருவருக்கும், தேனிக்கு வந்த ஒருவருக்கும். ராணிபேட்டைக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது.
குஜராத்தில் இருந்து திண்டுக்கல் வந்த 5 பேருக்கும், ராணிப்பேட்டைக்கு வந்த ஒருவருக்கும், தூத்துக்குடி வந்த ஒருவருக்கும், ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா இருந்துள்ளது.
வங்காளதேசத்தில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கும்
கொரோனா இருப்பது இன்று கண்டறியப்பட்டது.
3 பேர் சாவு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 3 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் தமிழகத்தில் இதுவரை 74 பேர் இறந்துள்ளனர்.