தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
Corona confirmed to 743 people in Tamil Nadu today
20-5-2020
தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தாலும் அது பரவித்தான் வருகிறது. ஆனாலும் இந்த கொரோனா விரைவாக பரவிதான் கட்டுக்குள் வரும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதே நேரம் நம்மைநாமே கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் கொரோனா பரவலை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.
தமிழகத்தில் கொரோனா பற்றிய தவர்கள் தினமும் மாலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் நேற்றைய(செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக இருந்தது. அதேநேரம் வைரஸ் பாதிப்பில் இருந்து 4,895 பேர் குணமடைந்திருந்தனர்.
நேற்று வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆக இருந்தது.
இன்று
தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) புதிதாக 743 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை
தமிழகத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் 660 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். மீதி 83 பேருர் மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள்.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் வைரஸ் உறுதி செய்யப்பட்ட சிலர் விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோன பாதிக்கப்பட்டவர்களில் 7,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் வாரியாக…
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக வருமாறு:-
சென்னை – 58
செங்கல்பட்டு – 557
காஞ்சிபுரம் – 14
புதுக்கோட்டை – 1
தென்காசி – 1
தஞ்சாவூர் – 1
தேனி – 1
திருவாரூர் – 23
தூத்துக்குடி – 1
விழுப்புரம் – 1
விருதுநகர் – 1
ரெயில் நிலைய தனிமைப்படுத்தல் – 1
மொத்தம் – 660
மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இன்று மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
செங்கல்பட்டு திரும்பியவர்கள் – 3
திண்டுக்கல் திரும்பியவர்கள் – 1
கள்ளக்குறிச்சி திரும்பியவர்கள் – 1
கிருஷ்ணகிரி திரும்பியவர்கள் – 1
மதுரை திரும்பியவர்கள் – 9
புதுக்கோட்டை திரும்பியவர்கள் – 5
தென்காசி திரும்பியவர்கள் – 2
திருவண்ணாமலை திரும்பியவர்கள் – 1
தூத்துக்குடி திரும்பியவர்கள் – 21
திருநெல்வேலி திரும்பியவர்கள் – 16
விழுப்புரம் திரும்பியவர்கள் – 6
விருதுநகர் திரும்பியவர்கள் – 5
மொத்தம் – 83
இந்த விவரங்களின் அடிப்படையில் (660+83) தமிழகத்தில் இன்று 743 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.