June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா; ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீனுக்கும் கொரோனா

1 min read


786 more people in Tamil Nadu Corona -Corona to the Stanley Hospital Dean

22-5-2020

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

786 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தினமும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலத்தை சுகாதாரத்துறை மாலையில் அறிவித்து வருகிறது.
அதன்படி, இன்று(வெள்ளிக்கிழமை) மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் ஆவர்.

இதனால் தமிழகத்தில் மொத பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

4 பேர் சாவு

கொரோனாவுக்கு இன்று மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேர் கொரோனாவால் பாதித்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது.

டீனுக்கு கொரோனா

சென்னையில் ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று அரசு ஸ்டாலின் மருத்துவமனை டீனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 846 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமாகி 7128 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.