June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கிணறை தூர்வாரும்போது மண் சரிந்து 2 பேர் பலி; பிழைப்புக்காக வேலைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்

1 min read


2 killed when the well was drilled

23-5-2020

மதுதாந்தகம் அருகே கிணற்றில் தூர்வாரும்போது மண் சரிந்து 2 பேர் பலியானார்கள். வேறு பணியில் இருந்த அவர்கள் தற்போது வேலை இல்லாததால் தூர்வார சென்றபோத இந்த பரிதாபம் நிகழ்ந்தது.

தூர்வாரும் பணி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே களத்தூர் கிராமத்தைச்சேர்ந்தவர் அருள். இவருக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் அதை தூர்வார நினைத்தார்.
இந்த தூர்வாரும் பணியில் நேற்று 9 பேர் ஈடுபட்டனர். அவர்களில் 4 பேர் கிணற்றுக்குள் இறங்கி மண்ணை அள்ளினார்கள். கிரேன் ஆபரேட்டர் உள்பட மற்றவர்கள் வெளியே நின்று வேலை செய்து கொண்டிருந்தனர்..

மண் சரிந்து 2 பேர் பலி

அப்போது திடீரென்று கிணற்றுக்குள் மண் சரிந்து விழுந்தது. இதில் 4 பேரும் மண்ணுக்குள் சிக்கினார்கள். இதில் களத்தூரைச் சேர்ந்த எழிலரசு(வயது 24), விஜி (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மண்ணில் புதைந்து இறந்து போனானர். சரவணன், மணி ஆகியோர் படுகாயம் உயிர்தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி ஒரத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான எழிலரசன் எலக்ட்ரீஷியன் வேலை செய்துவந்தார., விஜய் தனியார் நிதி நிறுவனத்திலும் வேலை பார்த்துவந்தார். தற்போது கொரோன ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலை இன்றிஇருந்தனர். ஆனாலும் பிழைப்புக்காக அவர்கள் கிணறு தூர்பாரும் வேலைக்குச் சென்றனர்.
அந்த இடத்தில்தான் இப்படி விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துபோனார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.