தமிழர்கள் வசிக்கும் மும்பை மும்பை தாராவியில் 1478 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1478 people in Tarawi, Mumbai
23-5-2020
மும்பை தாராவியில் இதுவரை 1478 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
மும்பை தாராவி
இந்தியாவில் பரவிவரும் கொரோனா மராட்டிய மாநிலத்தில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த மாநிலத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மும்பையில் உள்ள தராவி பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த பகுதி உலகின் அதிகம் குடிசைகள் நிறைந்த பகுதியாகும்.
மக்கள் நெருக்கடி உள்ள தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1478 பேர்
இந்த நிலையில், தாராவியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1478 ஆக அதிகரித்துள்ளது. இங்கு இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.