தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 பேர் சாவு
1 min read
Eight people die for corona in tamil nadu
24-5-2020
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 8 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இந்த மாதம் (மே ) தொடக்கத்தில் இருந்தே கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பற்றி தினமும் மாலையில் தகவல் வெளியிடப்படுகிறது.
நேற்று(சனிக்கிழமை) 759 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக இருந்தது.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 16277 ஆக உயர்ந்துள்ளது.
8 பேர் சாவு
கொரோனாவுக்கு இன்று மட்டும் 8 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 833 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8324 ஆக உயர்ந்துள்ளது.