சிங்கப்பூரில் சமூக இடைவெளி யை கண்காணிக்க இயந்திர நாய்
1 min read
Machine Dog to track social gap in Singapore
24-5-2020
கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூர் பூங்காவில் மக்களின் சமூக இடைவெளியை கண்காணிக்க இயந்திர நாய் பயன்படுத்தப்படுகிறது.
இயந்திர நாய்
மனிதனின் வேலைகளை சுலபமாக்க ரோபோ பயன்படுத்தப்படுகிறது. தற்போது பரவிவரும் கொரோனாவல் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசுஅறிவித்து உள்ளது. இதை போலீசார் கண்காணிக்கிறார்கள்.
இதற்கு சிங்கப்பூரில் இயந்திர நாய் பயன்படுத்துகிறார்கள்.
அதாவது சமூக இடைவெளியை மக்கள் சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க இந்த இயந்திர நாய் பயன்படுத்தப்படுகிறது.
இணைய தளத்தில் ஆங்கில பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி ஸ்பாட் என்னும் மஞ்சள் நிற ரோபோட் நாய் மக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.
அதேபோல் சிங்கப்பூர் பூங்கா ஒன்றில் மக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை ஸ்பாட் நாய் கண்காணிக்கிறது. ரிமோட் மூலம் இயக்கக்கூடிய இந்த ரோபோட் எந்த விதமான பரப்புகளிலும் மிக சுலபமாக பயணிக்க முடியும். இதை உருவாக்கியவர்கள் இந்த ரோபோட் சக்கரங்களை கொண்ட ரோபோட்களை போன்று இல்லாமல், எல்லா இடங்களிலும் செல்லும் வசதி உள்ளது.
இதுதவிர சென்சார்கள் கொண்டிருக்கும் ஸ்பாட் மக்கள் மீது மோதாமல் இருக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்கள்
ஸ்பாட் ரோபோட்டில் உள்ள கேமராக்கள், அதன் எதிரே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து கொள்ளும். இதுதவிர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, “உங்களுக்காகவும், உங்கள் அருகில் இருப்பவர்கள் நலனுக்காகவும் தயவு செய்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும். நன்றி.” என தெரிவிக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த போஸ்டன் டைனமிக்ஸ் எனும் நிறுவனம் இந்த ரோபோட்டை உருவாக்கியது.