தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா உறுதி; 7 பேர் சாவு
1 min read
Coronation confirms 805 people in Tamil Nadu- 7 people die
25-5-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர்.
805 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி தினமும் மாலையில் அறிவிக்கப்படுகிறது. அதன்படி நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பற்றி கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) 805 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 491 ஆண்கள், 314 பெண்கள். இதுவரை கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த மொத்த எண்ணிககை 17,082
7 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று (திங்கட்கிழமை) மட்டும் இன்று 7 பேர் இறந்துள்ளளர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
இன்று இறந்தவர்களில் 5 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் இறந்துள்ளனர்.
இன்று மொத்தம் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 8,731 ஆகும்.
தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 51.11 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 0.69 சதவீதமாகவும் உள்ளது.
வெளி மாநிலத்தில் இருந்து…
இந்தியாவிலேயே அதிகபட்ச மாதிரிகள் சோதனையிட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுவரை 4,21,480 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்குள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது புது சவாலாக இருக்கிறது. அந்தவகையில் இன்று மட்டும் 93 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 726 பேரும், குஜராத்தில் இருந்து வந்தவர்கள் 26 பேரும் உள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களில் 88 சதவீதத்தினருக்கு எந்த அறிகுறியும் இல்லை. விமானத்தின் மூலம் தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கையில் தனிமைப்படுத்தலுக்கான அச்சிடப்பட்டு, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் செல்பவர்களும் பரிசோதனை செய்யப்பட்டே அனுப்பப்படுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.