சாலையோரம் மது குடித்த இருவர் பலி
1 min read
26.5.2020
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள காருகுறிச்சி, 1வது தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் புதியராஜ் (46. விவசாய கூலி தொழிலாளி. கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் இவரும், சேரன்மகாதேவி பகுதியில் வாழைகளை வெட்டுவதற்காக வந்த குரும்பூரை சேர்ந்த சுடலை மகன் கங்கா (30) என்பவரும் நேற்று மதியம் புதுக்குடி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர்.
போதை அதிகமான நிலையில் இருவரும் மயங்கினர். மாலையில் அவ்வழியாக சென்றவர்கள் அருகே சென்று பார்த்தபோது புதியராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து விரைந்து வந்த வீரவநல்லூர் போலீசார், மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிய கங்காவை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் கங்கா பரிதாபமாக இறந்தார்.