June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வுக்கு தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

1 min read

Will rock the world When will the vaccine be used for coronavirus?

26-5-2020

சீனா வின் வூகான் நகரில் பிள்ளையார் சுழி போட்ட கொரோனா வைரஸ் கடந்த 6 மாதமாக உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. அறிகுறியின்றி பரவும் கொரோனாவால் உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு என மார்தட்டி க்கொள்ளும் அமெரிக்காவில் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 1,38,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் 17,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன. தமிழக அரசின் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்லைக்கழக துணை வேந்தர் சுதா சேஷயன் கடந்த சில நாட்களுகு முன்பு கூறும்போது, கொரோனாவுக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் இதில் முதல் கட்டம் வெற்றி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தியா சார்பில் தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. மொத்தம் 10 மருந்துகள் கண்டறிந்து, அதில் 4 மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகுவம் மத்திய மந்திரி கூறியுள்ளார்.

அதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், தன்னார்வலர்கள் 4 பேருக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும், கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.