தமிழகத்தில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா
1 min read
Coronation for 874 people in one day in Tamil Nadu
29-5-2020
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக கொரோனா பரவல் பற்றிய விவரங்கள் தினமும் மாலையில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று(வெள்ளிக்கிழமை ) மட்டும் 874 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் மட்டும் 618 பேர் . இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 13,362 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்பில் செங்கல்பட்டில் 61 பேரும், திருவண்ணாமலையில் 48 பேரும், கள்ளக்குறிச்சியில் 19 பேரும் அடங்குவர்.
9 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 8,776 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 9 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்
கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.